பள்ளி பேருந்துகளில் ஏர் ஆரன்! தடை செய்ய சாலை பயணாளிகள் கோரிக்கை! ஆர்.டி.ஓ.வினர் செய்வார்களா?

கு.அசோக்,
காட்பாடியில் 638 பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார் - தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள பள்ளி மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 638 தனியார் பள்ளி பேருந்துகளின் ஓட்டுநர்களும் பங்கேற்றனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேருந்துகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பேருந்துகள் முறையாக இயங்குகிறதா அவசர கால ஜன்னல்களும் வழிகளும் பேருந்துகளில் முறையாக உள்ளதா தீ தடுப்பு சாதனங்கள் பேருந்தில் காலாவதியாகாமல் உள்ளனவா என பார்த்தார்.
மேலும் முதலுதவி பெட்டிகளும் பராமரிக்கபடுகிறதா ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்துறை அலுவலர் சுந்தர்ராஜன் வருவாய்த்துறை தீயணைப்பு துறை காவல்துறையும் இணைந்து இந்த ஆய்வினை செய்தனர்.
ஆய்வின் போது ஓட்டுநர்களும் தீ தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டது
பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 137 பள்ளிகளின் 638 பேருந்துகள் பள்ளி வேன் களை ஆய்வு செய்தோம்.
மேலும் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போல் மே-14 குடியாத்தத்தில் 236 தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வின் போது குறைபாடு உள்ள பேருந்துகளுக்கு ஒரு வாரகாலம் கால அவகாசம் அளிக்கவுள்ளோம்.
குறைபாடுகளை சரி செய்த பின்னர் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துவோம் அவர்களுக்கு ஒரு அட்டவனையை அளித்துள்ளோம்.
பள்ளி பேருந்தில் அவசர கால வழி கேமரா,மற்றும் முதலுதவி பெட்டிகள் தீதடுப்பு கருவிகள் ஆகியவைகள் இருக்க வேண்டுமென கூறியுள்ளோம்.
இரவு 11.30 மணிக்கு அனைக்கட்டு கெங்கநல்லூர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது அதில் 22 பேருக்கு லேசான காயம் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் ஓட்டுநர் லைசன்ஸ் கேன்சல் செய்யவும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுளோம் என கூறினார்.
இவ்வளவு ஆய்வு செய்தவர்கள் ஏர் ஆரன்களைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என்று கூறும் பொது மக்கள் பள்ளி பேருந்துகளின் ஏர் ஆரன்களுக்குய் தடைவிதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
இதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள்தான் செய்ய வேண்டும் அல்லவா?