சாந்தி மேடம் செய்தியாளர்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள்?

சாந்தி மேடம் செய்தியாளர்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள்?

ஜி.கே.சேகரன்,

 கவுன்சிலர் கூட்டத்தில் எதற்காக வீடியோ எடுக்குறீங்க போனை கட் பண்ணுங்க என்று நிருபர்களிடம் கமிஷனர் சாந்தி அடாவடி காட்டினார்.

 திருப்பத்தூர் மாவட்டம்,  திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற நடைபெற்றது. மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

  கவுன்சிலர்கள்  தங்கள் பகுதிக்கு உட்பட்ட நிறைகள் குறைகள் பற்றி எடுத்துரைக்க தயாரானார்கள்.

 இது போன்ற நேரத்தில் சலசலப்புகளும் நடைபெறுவது உண்டு. அதை செய்தியாளர்கள் உன்னிப்பாக கவனித்து செய்தி சேகரிப்பார்கள்.

  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது நிருபர்களுக்கு அனுமதி இல்லை வீடியோ எடுக்காதீங்க என திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் சாந்தி அடாவடியில் ஈடுபட்டார்.

 அதன் பின்பு மேனேஜர் ராமலிங்கம் நகர மன்ற கூட்டத்தில் டிஸ்கஸ் பண்றோம் அதனை வீடியோ எடுக்கக்கூடாது எனவும் கூறி மழுப்பி செய்தியாளர்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார்.

 அதன் பின்பு நகராட்சி ஊழியர் ஒருவர் நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற கட்டிடத்தின் கதவையும் திடீரென மூடினார் அதன் பின்பு தாமதமாக வந்த 30-வது வார்டு கவுன்சிலர் சங்கர் என்பவர்  எதற்காக நிருபர்களுக்கு நகர மன்ற கூட்டத்தில் அனுமதி இல்லை என்று கூறுகிறீர்கள் என கேட்டார்.

 அதற்கு சேர்மன் சங்கீதா வெங்கடேஷ் நம்முடைய டிஸ்கஸ் முடிந்த பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்  எனவும் கூறினார். இதன் காரணமாக நகர மன்ற கூட்டத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.