சொத்துக்காக கொலை முயற்சி செய்த திமுக கவுன்சிலர் சேகர்! குடும்பத்துடன் அராஜகம்!!
ர.மதன்,
ஆளுங்கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக ஒரு கவுன்சிலர் செயல்பட்டு வருகிறார். அவரது பெயர் சேகர், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டு கவுன்சிலராக அவர் உள்ளார்.
இந்நிலையில் கவுன்சிலர் சேகர் ஒரு குறிப்பிட்ட நபரை கல்லை தூக்கி போட்டு சாகடிக்க முயற்சி செய்வதும், அதற்கு உடந்தையாக அவரது மகள்,மருமகன் மற்றும் பெண்கள் தாக்குதலில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது.
சேகர் அடிக்கடி குடும்பத்துடன் இப்படி தாக்குதல் நடத்துவதால் அதை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே அங்கு கேமிரா பொறுத்தப்பட்டதாம்.
இது பற்றி கூறப்படுவதாவது,
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்த்துள்ளார்.
அதில், சத்துவாச்சாரி 2-ம் பகுதி 43-வது தெருவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறேன். வாகன நிறுத்தும் இடத்துக்கு செல்லும் இடம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் சேகர் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வாகன நிறுத்தும் இடம் அருகே நின்று கொண்டிருந்த என்னை கவுன்சிலர் சேகரின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கினர்.
அப்போது சேகர் அங்கு கிடந்த பெரிய கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றார். கவுன்சிலர் குடும்பத்தினரிடம் இருந்து எனக்கும், எனது குடும்பத்தினர் மற்றும் வாகன நிறுத்தும் இடத்தில் உள்ள வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புகாருடன், கவுன்சிலர் சேகர், ராஜசேகரை தாக்கி கொலை செய்ய முயலும் வீடியோவும் ஆதாரமாக போலிஸ் ஸ்டேஷனில் அளிக்கப்பட்டது.
அதேபோன்று கவுன்சிலர் சேகர் தரப்பில் இருந்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
டி.எஸ்.பி.திருநாவுக்கரசு அவர்கள் இது குறித்து விசாரித்த நிலையில் மேற்படி பிரச்சனைக்குரிய இடத்தை சர்வேயர் மூலம் அளந்து கொள்வதாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இருதரப்பினரும் வழக்கை வாபஸ் பெற்றனர்.
அப்படி சர்வேயர் அளக்கும் வரை அங்கு நடப்பட்டிருக்கிற கல்லை பிடுங்கிவிடுமாறு டிஎஸ்பி தரப்பில் கவுன்சிலர் சேகருக்கு சொல்லப்பட்டது.
அதற்கு ஒப்புக் கொள்ளாத சேகர் டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஓரளவுக்கு அமைதிகாத்த போலிசார், விஷயம் எல்லை மீறி போகவே "சேகர் கல்லை எடுக்காவிட்டால் உங்கள் மீது வழக்கு தொடக்க வேண்டியதாக இருக்கும், ஜெயிலுக்கும் அனுப்புவோம்" என்று வார்னிங் விட்டனர்.
அதன் பின்னர் பம்மிய சேகர் கல்லைபிடுங்க ஒப்புக்கொண்டு வெளியேறியிருக்கிறார்.
இது குறித்து திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் சொன்னபோது, கட்சியின் பெயரை கெடுக்கும் அளவுக்கு சேகரும் அவரது மகளும், மருமகனும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் வேலூர் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு முன்னரே இந்த சம்பவம் நடந்தது. இதில் சேகரால் பாதிக்கப்பட்டவரும் திமுக வைச் சேர்ந்தவர்தான். அமைச்சர் ஒருவருக்கு அவர் நெருக்கமானவர். ஆகவே இதை சற்று தள்ளிப்போட்டார். போலிசாருக்கும் தர்ம சங்கடம்.
அதே நேரத்தில் இந்த சேகர் திமுக போர்வையில் இருந்துக் கொண்டு குடும்பத்தோடு இப்படி வெட்ட வெளியில் அடாவடியாக செயல்பட்டுள்ளார். அவர் மீது இப்படி நிறைய புகார்கள் உள்ளன. அவருடைய வார்டில் கொசுத் தொல்லையும், பன்றி பண்ணையும் மக்களை சுகாதார சீர்கேடுக்கு ஆளாக்கிவருகிறது.
அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாமல், சொத்துக்காக இப்படி கொலை முயற்சிவரை இறங்குவதும், கூடவே குடும்பத்தாரை அதற்காக பயன்படுத்துவதும் கழகத்துக்கு அல்லவா அவப்பெயரை ஏற்படுத்தும்.
ஆகவே, கழகத்தின் போர்வையில் இருந்துக் கொண்டு இது போன்று கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்களை கட்சியை விட்டு விரட்டியடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை பெறமுடியும் என்றார் வேதனையுடன்.