சமூக விரோத செயலுக்காக மூவர் மீது குண்டாஸ்!

கு.அசோக்,
ஆற்காடு, சிப்காட் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இராணிப்பேட்டை மாவட்டம் , சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை பிடிக்க இராணிப்பேட்டை வட்ட ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அக் குழுவினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஆற்க்காடு பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (24) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதேபோல் இராணிப்பேட்டை நகரத்தில் பல இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் விஜய் (எ) ஆத்து விஜய் (25) என்பவரை ராணிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அரக்கோணம் கிராமிய காவல் எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் சாலை பகுதியை சேர்ந்த முருகன் (20) என்பவரை அரக்கோணம் கிராமிய காவல் காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த மூன்று குற்றவாளிகளுக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் பரிந்துரை பேரிலும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி இந்த மூன்று இளைஞர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.