ராஜேந்திர பாலாஜியை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைப்பு! எஸ்கேப் இல்லையாம்!

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைப்பு! எஸ்கேப் இல்லையாம்!

 ம.பா.கெஜராஜ்,

 ராஜேந்திர பாலாஜி தலைமறை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ள நிலையில், அவரை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறாது.

 தமிழக அரசின், ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த புகாரை விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் என்பவர்கள் அளித்துள்ளனர்.

  அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

   ஆனால், அந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்காக ஆறு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், முன்ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

 இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அதில், தனது மகன்கள் மற்றும் ஓட்டுனரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

  இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுவாமிநாதன், விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினருக்கு தொந்தரவு செய்ய கூடாது.  குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமென்றாலும் தேடி கொள்ளுங்கள்.

 முறைப்படி சம்மன் அனுப்புங்கள்.  அதன்பின்பு குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

  இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் பெங்களூருவில் உள்ளதாக கிடைத்த தகவலில் பேரில் அங்கு போலிசார் விரைந்துள்ளனர்.

  அப்படியிருக்க ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார்.