ரவுண்டு கட்டி ஆய்வு நடத்திய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர்!

ரவுண்டு கட்டி ஆய்வு நடத்திய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர்!

 தெ.நெல்சன்,

 தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் திரு.பால் கிஷன் கோயல் அவர்கள் வேலூர் மாவட்டம் கொணவட்டம் அரசு மேனிலைப் பள்ளியில்  ஆய்வு மேற்கொண்டு, மாணாக்கர்களுக்கான மதிய உணவினையும், மதிய உணவு திட்ட மளிகைப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.  மேலும், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத்துறை, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.

  பின்னர் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.  அதே போல் காட்பாடி வட்டம் கசம் பகுதியில் உள்ள முதியோர்  இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

   இந்த ஆய்வுகளின் போது முதன்மை கல்வி அலுவலர் திருமதி.மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) திரு.ஜெகதீசுவரபிள்ளை உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.பி.இரத்தினசாமி,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ர.க.கவிதா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவர் திருமதி.ராஜலெட்சுமி, கண்காணிப்பாளர் திரு.அப்துல் ரகுமான் ஆகியோர் உள்ளனர்.