இராசாயன கழிவுநீரை நிலத்தில் கலந்த ஹசீனா தோல் தொழிற்சாலை! மின் இணைப்பு துண்டித்து இழுத்து மூடப்பட்டது!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடியில் தோல் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்யமால் நிலத்தில் வெளியேற்றிய தோல்தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டதிருப்பத்தூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஹசீனா ட்ரேடர்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்டனர்.
அப்பொழுது தோல் தொழிற்சாலைநிர்வாகத்தினர், தோல் கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திரிப்பு செய்யாமல், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நிலத்தில் வெளியேற்றி வருவது கண்டறியப்பட்டது.
இதனால் இப் பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளதாலும், மேலும் அத்தொழிற்சாலையானது அபாயகரமான பொருட்களை கையாளுவதற்குரிய உரிமம் பெறப்படாத காரணத்தினாலும் ஹசீனா ட்ரேடர்ஸ் தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை மூட திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் த கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரை ஏற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஹசீனா ட்ரேடர்ஸ் மின் இணைப்பினை துண்டிக்க உத்திரவிட்டது. எனவே தொழிற்சாலைக்கு மூடுதல் உத்திரவு அளிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரினையோ அல்லது திடக்கழிவுகளை நிலத்தின் மேல் அல்லது நீர் நிலைகளில் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்திரவு அளிக்கப்படும் என்றும், மேலும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்தவிதமான அன்றாட உபயோக கழிவு நீரை ஆற்றிலோ / கழிவுநீர் வாய்க்காலிலோ வெளியேற்றம் செய்யக்கூடாது என்றும் அதற்கு அமைப்பு எதுவும் இருந்தால் அவைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
நல்லதை செய்தால் சரி.