விசிகவை ஈர்த்து விட்டதா த.வெ.க! அப்படின்னா பா.ஜ.க.வின் பி.டீம் இல்லையா?!

ம.பா.கெஜராஜ்,
தமிழக வெற்றிக் கழகம் விடுதலை சிறுத்தை கட்சியுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் அதை முன்னிறுத்தியே விஜய் முதல் மாநாட்டில் பேசினார் என்று கருத்துகள் வெளியாகி வருகின்றன.
'விஜய் தனது உரையில் 'அரசியல் அணுகுண்டு' என்ற பிரகடனத்தோடு அறிவித்த ஒரு விஷயம், '2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்' என்பதே.
"இதுவரை தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் அறிவிக்காத ஒரு விஷயம் இது,"
இந்த அறிவிப்பை, விஜய்யின் 'கூக்ளி பந்துவீச்சு'. தமிழ்நாட்டில் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதை விஜய் உணர்ந்தே இருப்பதாகக் கருதப்படுகிறாது.
ஆனால், இந்த ஆட்சி அதிகாரப் பகிர்வு பிரகடனத்தின் மூலம் விஜய் யாரைக் குறிவைக்கிறார்?
"தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளைத் தான்," என்று கூறப்படுகிறது.
"இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான அழைப்புதான்," என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
"தற்போது திருமாவளவன் மட்டும்தான் 'ஆட்சியில் பங்கு' கேட்கிறார். அதேபோல திருமாவளவனுக்கும் விஜய்க்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் நடந்ததாகத் தெரிகிறது," என்றும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க பாஜகவை சித்தாந்த எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் விஜய் பேசியதற்கு தமிழிசை ரியாக்ட் செய்திருக்கிறார்.
தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, "பிரிவினை பேசாதவர்களை பிரிவினை பேசுகிறோம் என்று கூறி அதற்கு ஒரு அடையாளத்தை அவரே பூசி அதற்கு தாங்கள் எதிரி என்று கூறுகிறார்.
எங்களை மறைமுகமாக விமர்சிப்பவரை எங்களின் எதிரி இல்லை என்று நாங்கள் சொல்ல முடியாது. விஜய் பாஜகவை தவறாக அடையாளப்படுத்துகிறார். நாங்கள் பிரிவினையை பேசவில்லை.
இன்னும் சொல்லப்போனால் 27 லட்சம் சிறுபான்மையினர் பாஜகவில் இணைந்துள்ளனர். சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை என்றால் மத்தியில் ஆட்சியை பிடித்திருக்க முடியாது. எல்லோருக்கும் தண்ணீர் தர வேண்டும் என்கிறார்.
அதுதான் ஜல்ஜீவன் திட்டம். பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்கிறார். இன்று நிதியமைச்சராக பெண் தான் இருந்து வருகிறார். மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு பதவிகள் தருவேன் என்கிறார்கள். பாஜகவில் பெண்களுக்கு 33 சதவிகிதம் பதவிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர், என்டிஆருடன் விஜய் தன்னை ஒப்பிடுகிறார். ஆனால், அவர்களுடன் இவரை ஒப்பிடவே முடியாது. ஏனெனில் இருவரும் முதலிலேயே கட்சியில் இணைந்து மக்களுக்காக பணியாற்றியவர்கள். அதேபோல விஜயகாந்த் திரைப்பட நடிகராக இருந்தாலும் பல சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஆனால், திடீரென மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார். மற்றவர்கள் எல்லாம் மோசம் என்று கூறுகிறார். இது எப்படி சரியாக இருக்கும்? எவ்வளவோ மாநாடுகள், உரைகளைப் பார்த்துள்ளோம். அதேபோல இதுவும் ஒர் உரை அவ்வளவுதான்.
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு ஆளுநர்கள் வேண்டாம் என்று சொல்கிறார். நல்லது செய்த எத்தனையோ ஆளுநர்கள் இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக வந்த பிரச்னைக்காக ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதை என்ன சொல்வது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தரப்பு.
"புதுசு புதுசா வரட்டும் தப்பே இல்ல.. நாம் பார்க்காதவர்களா.." - மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு
"யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது" தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து.
விசிக.
இதுதொடர்பாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய் என்று கூறிய ஆதவ் அர்ஜுன், "அவருக்கு வாழ்த்துகள். எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்" என்றும் அதில் தெரிவித்திருக்கிறார்.
விஜயை பாஜகவின் தமிழிசை விமர்சித்து பேசியுள்ளதும், விசிக சார்பாக ஆதவ் அர்ஜூன் விஜய்யின் உரையை வரவேற்றிருப்பதையும் கவனித்தால் த.வெ.க. ஆனது பா.ஜ.க. வின் பிடீம் இல்லை என்று உறுதியாகியுள்ளது.