ஆலயத்துக்குள் செருப்பு:- திமுகவினரை கண்டித்து ஆர்பாட்டம்!

ஆலயத்துக்குள் செருப்பு:- திமுகவினரை கண்டித்து ஆர்பாட்டம்!

 கு.அசோக்,

   ஆலயத்தினுள் செருப்பு அணிந்து சென்று இந்து பக்தர்களின் மனதை புண்படுத்திய திமுகவினரை கண்டித்து  இந்து முன்னணி கோஷம் - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்தில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

  வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடி சாலையில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா விழா நடைபெற்றது.

 இதில் அமைச்சர்கள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 அப்போது திமுகவினர் பெரும் கூட்டமாக ஆலயத்துக்குள் சென்றனர்.

 ஆனால் அவர்கள் ஆலயம் என்று கூட பார்க்காமல் ஆலயத்தினுள்ளேயே செருப்பு அணிந்து வந்து விழாவில் கலந்துகொண்டனர்.

 இதில் பக்தர்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக நடந்த இந்த செயலை கண்டித்தும் மேலும் செல்லியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை அரசு எடுத்துகொள்ள இருப்பதை அமைச்சர் துரைமுருகன் பேசியதை கண்டித்தும்   இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

   இதனை மாவட்ட பொருளாளர் பாஸ்கர் துவங்கி வைத்தார் இதில் திரளானோர் கலந்துகொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்   

  பின்னர் இந்து சமய அதிகாரிகளிடம் மனு கொடுக்க வந்தனர், ஆனால் ஒரு ஊழியர் கூட ஆலயத்தில் இல்லாததால் இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து முற்றுகை செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.