திருவாரூர் பள்ளிகளுக்கு நாளை லீவு விட்ட சிஇஓ 1

திருவாரூர் பள்ளிகளுக்கு நாளை லீவு விட்ட சிஇஓ 1

க.பாலகுரு

திருவாரூர் மாவட்டத்தில் மகா சிவராத்திரியை  முன்னிட்டு நாளை திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை முதன்மை கல்வி அதிகாரி விஜயா பேட்டி.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த  கன மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை சிவராத்திரி கொண்டாடப்படுவதால்  மாணவர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நாளை சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது என திருவாரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் விஜயா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.