கடவுளே போலியாக கடன் பெற்றிருந்தாலும் விடமாட்டோம்! அமைச்சர் கறார்!

ம.பா.கெஜராஜ்,
கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் மார்ச் 31-ம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முதல் நிகழ்ச்சி கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
சென்னையில் நடந்த அந்த விழாவுக்கு பின்னர் அமைச்சர் செய்தியாளார்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு சேட்டு 600 நகை கடன் பெற்று 2 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
தகுதியான பயணிளிகளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
போலி நகை கொடுத்தும், வெறும் பையை வைத்தும் கடன் பெற்றவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்
கடவுள் போலியாக கடன் வாங்கியிருந்தாலும் விடமாட்டோம்.
இப்போக் கூட ஆட்டோ டிரைவர் ஒருவரை அரசு ஊழியர் என்று கணக்கு காட்டி அவருக்கு தள்ளுபடி செய்யவில்லை. அது பற்றி தெரியவந்ததும், விசாரித்து ஆட்டோடிரைவரை பயணாளியாக்கியுள்ளோம். என்றார். திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.