கழிவுநீர் கால்வாய் நடுவிலும் மின் கம்பம்! மக்கள் அச்சம்!

 கு.அசோக்,

 புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலையில் நடுவிலும் கழிவுநீர் கால்வாய் நடுவிலும் மின் கம்பம் அதிர்ச்சியில் பொதுமக்கள்.

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கூட நகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல் ஆலத்தூர் பகுதியில் புதியதாக பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்றுள்ளது,

 இந்நிலையில், மேல் ஆலத்தூர் பகுதியில் புதியதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலையில் நடுவில் மின்கம்பம் அகற்றப்படாமல் சாலை போடப்பட்டுள்ளதாகவும், இந்த சாலையின் நடுவில் உள்ள மின் கம்பம் மீது வாகனம் மோதி விபத்துக்கள் ஏற்படும் முன் மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என மக்கள் எச்சரிக்கிறார்கள்.

 அதே பகுதியில் புதிதாக போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் நடுவில் மின் கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  சாலையின் நடுவிலும் கழிவுநீர் கால்வாய் நடுவிலும் மின்கம்பம் அகற்றாமல் கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.