பெண்ணை கொன்ற டிரைவர்! லைசென்ஸே இல்லாதவரை காப்பாற்றும் கார்ப்பரேஷன் அதிகாரிகள்! சிறுபான்மையினரின் ஓட்டு முக்கியமாச்சே? 

 ஜே.தே.பிரகாசம்,

 கடந்த மாதம் 16 ஆம் தேதி அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அஸ்வினி என்கின்ற பெண் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தனியார் நிறுவன மொன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் கணியம்பாடியை சேர்ந்த அஸ்வினி.

 வேலூர் தோட்டப்பாளையம் அருகே தன் அண்ணனுடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது அதி வேகமாக வந்த வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 கால்வாய் கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டு இருந்த மண் மீது ஏறி அஸ்வினியின் அண்ணன் சறுக்கி விழுந்ததாக மாநகராட்சி நிர்வாகிகள் அப்போது கூறினர்.ரந்த மண்ணை கொட்டிவைத்ததே மாநகராட்சி தான் என்பது தனிக்கதை.

  அப்படியிருக்க தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை உடனடியாக 10 நாட்களுக்குள் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்றும் விபத்து குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு புறப்பட்டார்.

 இது ஒரு புறம் இருக்க, மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் லாரியை இயக்கி வந்த ஓட்டுனர் வெங்கடேசன் விபத்து நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

   வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலை மறைவு குற்றவாளியான வெங்கடேசனை காவல் நிலையத்தில் ஒப்படை செய்ய மாநகராட்சி அலுவலர் பாலமுருகனிடம் கேட்டுக் கொண்டார்.

 ஆனாலும் இது வரை அந்த ஓட்டுநரை மாநகராட்சி அதிகாரிகள் சரண் செய்யவில்லை.

  எனவே ஓட்டுநர் வெங்கடேசன் குறித்து விசாரித்த போது அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது போலிசாருக்கு தெரியவந்துள்ளது.

  இது குறித்து வேலூர் மாநகராட்சி  ஆணையரிடம் அறிய செய்தியாளர் முற்பட்டபோது சரியான பதில் ஏதும் கூறாமல் அது எங்கள் பிரச்சினை நீங்கள் என் கேட்கிறீர்கள் என  செய்தியாளருக்கு பதில் அளித்திருக்கிறார்.

  மக்களுக்கு சேவை ஆற்றூவதற்காக வாங்கப்பட்ட கழிவு நீர் ஏற்றிச் செல்லும் லாரி போலீசார் பிடியில் சிக்கி துருப்பிடிக்க தயாராகி வருவதைப் பற்றியும் துளி கூட ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கவலைப்படவில்லை.

 இறந்துவிட்ட பெண்ணுக்காக கொஞ்சம் கூட வருத்தப்படாமல் லைசன்ஸே இல்லாமல் அரசாங்க வாகனத்தை ஓட்டி மோசடியாக சம்பளம் பெற்று வந்த ஓட்டுநர் வெங்கடேசனுக்காக அதிகாரிகள் சப்போர்ட் செய்வது ரொம்பவே வேதனை அளிக்கிறது.

 குறிப்பு:- மாநகராட்சியை பொறுத்தவரைக்கும் இன்னொறு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. வேலூர் சார்பனாமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ பிஷப் முகாம் அலுவலகம் மற்றும் அண்ணாசாலையில் உள்ள சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தின் வெளியிலும் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தம் செய்யப்பட்டுவருகிறது.

 அவற்றை அகற்றக்கோரி கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆட்சியருக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டது, அதே போல் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் ப.கார்த்திகேயனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால் ஏனோ தெரியவில்லை இதுவரை அவற்றை அகற்றவில்லை.

இந்நிலையில் வேலூர் சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தின் பொன் விழா ஆண்டின் தொடக்க நிகழ்வுகள் ஜன-24 முதல் 26 ஆம் தேதி வரை சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் நடைபெறுகிறது. அப்படியிருக்க மேற்படி குப்பை அசுத்தங்களை அகற்ற வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடங்களை குப்பை குடோனாக மாற்றிவருவது வேதனை.

 பொன் விழா தொடக்க ஆண்டின் எம்.எல்.ஏ.வும் பங்கேற்கிறாராம்..அது சரி சிறுபான்மையினரின் ஓட்டு முக்கியமாச்சே?