வேலூர் சி.எஸ்.ஐ பேராயத்தின் பொன் விழா கோலாகலமாக துவங்கியது!
ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம்,வேலூர் சி.எஸ்.ஐ பேராயத்தின் பொன் விழா ஆண்டு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொன் விழா கொண்டாட்டம் பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய ஆலயத்தின் செயலாளர் ஜோசுவா வரவேற்புரையாற்றினார்.
இது பற்றின விவரம் வருமாறு,
அண்ணாசாலையில் உள்ள சி.எஸ்.ஐ பேராலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த பொன் விழாவில் கடவுளுக்கு நன்றி கூறும் வழிபாடு கடைபிடிக்கப்பட்டது.
பேராயர் ஹென்றி லாசரஸ் அவர்கள் சென்னைப் பேராயத்தின் உதவிப் பேராயராக இருந்தபோது 1976-ல் வேலூர் பேராயம் உதயமானது. அப்போது பேராயக் கொடி, பேராய கொள்கை, 'உலகில் எமக்கொரு பெருமை எங்கள் மீட்பர் சுமந்த அந்தச் சிலுவை" என்கிற பாடல் ஆகியவற்றை வடிவமைத்து வழங்கினார்.
மேற்படி பேராயம் 1976-ல் உதயமாகி 25.1.2025 அன்று 49 ஆண்டுகளை நிறைவு செய்து, 26.1.2025-ல் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இவற்றுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்த நேற்று 24.1.2025 அன்று வேலூர், மத்திய ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் முன்னாள் பேராயர்கள் பேரருள்திரு. ஒய்.வில்லியம். பேரருள்திரு. அ.ராஜவேலு, தாய் பேராயமாகிய சென்னைப் பேராயத்தின் முன்னாள் பேராயர்கள் ,. பேராய அலுவலர்கள், உதவித் தலைவர் அருள்திரு. ஜெயசீலன் ஞானாதிக்கம். செயலர் அருள்திரு. அகஸ்டின் பிரேம் ராஜ், பொருளர் முனைவர் சாமுவேல் கொர்நெலியஸ். பேராயரம்மாக்கள் திருமதி. ஷீலா மகிமை ரூபஸ். திருமதி. ஜோஸ்பின் மாசிலாமணி அசரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க.வேலு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் சிஎம்சி மருத்துவமனையின் நிறுவனர் சோபியா ஐடாஸ்கடர் குடும்பத்தினர், ஆர்த்தர் சதானந்தம், பேராய மக்கள், மாற்று மதத்தினர் என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
50-ஆண்டுகள் கடந்த இந்த பேராயம் நூற்றாண்டை கடக்கும் என பேராயர் பேசினார். மேலும் ஆயர்கள் கிறிஸ்துவ தலைவர்கள் பேராய மக்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது முன்னாள் பேராயர்கள் ஜே.சாம் பொன்னையா, ஆர்.டி. பாஸ்கரன், மகிமை ரூபஸ் ஆகியோரின் பணிகள் நினைவு கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வேலூர் மத்திய ஆலயத்தின் செயலாளர் ஜோசுவா, பொருளாளர் ஆரோன், ஆண்ட்ரு சாம் ரத்தனசிங், ஸ்டாலின், ஜான்சன், சுரேஷ் ரவிக்குமார், சத்யா பாபு, ஆசிரியர் ஸ்டேன்லி, ஆண்கள், பெண்கள் மற்றும் வாலிபர் அய்க்கிய சங்கம் உள்ளிட்ட குருசேகர குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக அண்ணா சாலையில் உள்ள ஐடா ஸ்கடர் சிலைக்கு பேராயர் சர்மா நித்தியானந்தம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.