குட்கா விற்றால் குண்டாஸ்:- வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு எச்சரிக்கை!

ரா.மதன்,
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை புகையிலை வஸ்துக்களை இனி விற்கக் கூடாது என்பதை அறிவுறுத்துவதற்கான கூட்டம் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது. வடக்கு காவல் நிலையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் டிஎஸ்பி திருநாவுக்கரசு கூறுகையில், போதை வஸ்துக்கள் கடைகளில் விற்கவே கூடாது.
அரசால் தடை செய்யப்பட்டு உள்ள ஆன்ஸ், குட்கா போன்றவற்றை விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படிப்பட்ட போதை புகையிலையை முதல் முறையாக விற்பனை செய்கிறார்கள் என்று தெரிய வந்தால் முதல் முறையாக என்பதால் 5 ஆயிரம் அபராதமும் இரண்டு முறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அதை மீறி மூன்றாவது முறை விட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து பர்மா பஜார் கடை உரிமையாளர்களை அழைத்துப் பேசி கையில் செல்போன் திருட்டு சம்பந்தமாக அதிகமாக புகார் வருகின்றது, அப்படி சிரித்து சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கினால் தங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்படி கொண்டு வருபவர்களிடம் மெல்ல பேச்சுக் கொடுத்துக் கொண்டே கடை உரிமையாளர்கள், போலிசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்துக் கொண்டனர்.