1170 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! திருப்பத்தூர் கலெக்டர் வழங்கினார்!

1170 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! திருப்பத்தூர் கலெக்டர் வழங்கினார்!

  ஜி.கே.சேகரன்,

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தில் திருப்பத்தூரில் புதிய மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

  தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான ஆணையை கடந்த 9ம் மாதம் 23ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து அறிவித்தார்.

   இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மின் பகிர்மான எல்லைக்குட்பட்ட 1814 விவசாயிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட 1230 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்தில் மொத்தமாக உயர் மற்றும் குறைந்த மின் அழுத்தம் உள்ள மின் மாற்றிகள் மொத்தம் 632 மின்மாற்றிகள் அமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

  அதன் காரணமாக  கோவையிலிருந்து மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்த பின்பு அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மின் பகிர்மான எல்லைக்குட்பட்ட 1770 விவசாயிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட 1170 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க நிர்ணயிக்கப்பட்டது.

   எனவே திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு பகுதியில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஒரு கம்ப மின்மாற்றி 63 கி.வோல்ட் அமைக்கப்பட்டு அதிலிருந்து கோணப்பட்டு பகுதியில் உள்ள விவசாயிக்கு இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

  இதில் தலைமை கூடுதல் பொறியாளர் பன்னீர்செல்வம், செயற்பொறியாளர் அருள் பாண்டியன்  உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், பிரபு,சந்தானம்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.