கிரீன் சர்கிள் அருகே சாலை அகலப்படுத்தபடும்:- ஆட்சியர் தகவல்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் செல்லும் பாதை மற்றும் வெளியே செல்லும் பாதை ஆகியவற்றையும், அருகிலுள்ள சாலைகளையும் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் ஆய்வு செய்தார்.
எஸ்.பி.எஸ்.ராஜேஸ் கண்ணா இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது, கிரீன் சர்க்கிள் முதல் புதிய பேருந்து நிலையம் வரையில் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளது - புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் பேட்டி
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கீரின் சர்கிள் பேருந்து நிலைய பகுதிகளை ஆய்வு செய்தோம் கிரீன் சர்க்கிள் முதல் பேருந்து நிலையம் வரையில் அதிக அளவு மழை நீர் தேங்குகிறது அதனை தேங்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது எனவும் பேருந்துகள் லத்தேரி வழியாக குடியாத்தம் செல்லும் பேருந்துகள் சித்தூர் பேருந்துகள் வர இடைஞ்சலாக இருப்பதாக சாலையின் நடுவில் உள்ள மீடியன் அகற்றவும் கூறியுள்ளோம்.
மேலும் பேருந்து நிலையத்தில் 4 இடங்களில் ஏடிஎம் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காட்பாடி - பாகாயம் பேருந்துகள் நிற்க ஷெட்டுகளும் அமைக்கபடும் இந்த சாலை அகலப்படுத்தபடும் மேலும் புதிய பேருந்து நிலையம் மேம்பாலம் மேல் வளையவும் கீழே இறங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது அதனை மீண்டும் ஆய்வு செய்து திறக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.
அதே போல் வேலூர் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் வாக்குவ்சாவடிகளின் பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.