கைது செய்த கையாலேயே சல்யூட் அடிக்கனுமா? செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி விவகாரம்..உச்சநீதிமன்றத்துக்கு போகிறார்களாம்!

ஜி.கே.சேகரன்,
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை அளிக்க கூடாது என ஏற்கனவே ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளோம் அப்படி மீறி நியமித்தால் உச்சநீதிமன்றம் வரையில் சென்று வழக்குதொடர்ந்து நியாயத்தை நிருபிப்போம் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி தலைவர் சுரேஷ்பாபு பேட்டி
வேலூர்மாவட்டம், கருகம்புத்தூரில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் கூட்டம் அதன் தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சரவணன் ராஜா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.
பின்னர் கட்சியின் தலைவர் சுரேஷ்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இது சட்டத்திட்டத்திற்கும் மக்களுக்கும் எதிராக பயத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.
அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜிக்கு வழங்க கூடாது என நாங்கள் ஆளுநரை¢ சந்தித்து புகார் அளித்தோம். அவர் செந்தில் பாலாஜி ஜாமினீல் தான் வெளிவந்துள்ளார் அவர் நிரபராதி என நிருபிக்கப்படவில்லை அவர்கள் மீது புகார் கொடுத்து தண்டனை வழங்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் தான் வழக்கு பதிவு செய்தார் அவரே இன்று செந்தில் பாலாஜியை தியாகி என்று கூறியுள்ள வெட்ககேடான செயலாக உள்ளது.
இதனை பார்க்கும் மக்கள் அனைவருக்கும் ஆதங்கம் உள்ளது. மக்களை காக்க வேண்டுமென முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை வைக்கிறோம். ஆளுநருக்கு அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றம் சென்று வழக்குதொடரவுள்ளோம்.
இத்தனை ஆண்டுகள் நீங்கள் மக்களை முட்டாள்களாக்கியது போதும் மக்களின் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம். அளிக்க வேண்டும். 421 நாட்கள் செந்தில் பாலாஜி சிறையிலிருந்தார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார் அவர் மாவட்ட நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் வரை சென்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அவர் இன்னும் விடுதலையாகவில்லை புகார் கொடுத்த மக்கள் பயப்படுவார்கள். நேற்று வரை இவரை கைது செய்ய சென்ற காவல்துறையினர் அதே கையால் அவருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய அசிங்கமான நிலை ஏற்படும்.
எனவே அவரே குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார் அப்படி இருக்க அவருக்கு தியாகி பட்டம் கொடுத்துள்ளனர். முன்னர் முதல்வரே சொல்கிறார் துரோகி என சொன்னவர், இப்போது அவரே தியாகி என கூறுகிறார் இதில் எது உண்மை மற்ற கட்சியில் செந்தில் பாலாஜி இருந்த போது துரோகி இப்போது அவர் தியாகி அப்படி தான் உள்ளது என சொன்னார்.