கலெக்டரிடம் மனு கொடுக்க தடைவிதித்த போலீசார்! கோபத்தில் அப்பாவி மக்கள்!

கு.அசோக்,

வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுக்க  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கூட்டமாக வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்புஏற்பட்டது - வாலாஜா  அருகே வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் தீக்களிப்போம் என குடியிருப்பு வாசிகள் கூறியதால் டென்ஷன்.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா  நகராட்சிக்குட்பட்ட 21 ஆற்காடு தெத்து தெரு மற்றும் 23 இந்திரா நகர் ஆகிய இரண்டு வார்டுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 ஆனால் அவர்களுக்கு இதுநாள் வரை  பட்டா போன்ற முறையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.

 இதனை அடுத்து சுமார் 40 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகத்திடம் வீட்டுமனை பட்டா கோரி பலமுறை நடையாய் நடந்து புகார் மனுக்களை அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் ஆவேசத்தோடு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

 இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் ஆண்கள் வயதானவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி இனிவரும் காலங்களில் இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களுடைய இந்திய குடியுரிமைக்கான அடையாளமான ஆதார் கார்டு, குடும்ப அட்டை, தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சாலையில் போட்டு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தியதோடு மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைக்கும் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுத்தனர்.

  மேலும், வாழ்வதற்கு தகுதி இல்லை என நினைத்து பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கேன்களை கையில் வைத்துக்கொண்டு உடலின் மீது ஊத்தி கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து மாபெரும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

 இதே போல இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 23 ஆகிய இரண்டு வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாங்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டு மனை பட்டாவை இதுநாள் வரை வழங்கவில்லை என கூறப்படுகிறது..

  இதனையடுத்து அப்பகுதி வாசிகள் ஏராளமானோர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டுமனை கோரி புகார் மனுவை கொடுக்க வருகை தந்ததால் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக பணியில் இருந்த ஏராளமான காவலர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி ஐந்து நபர்கள் மட்டுமே புகார் கொடுக்க செல்ல வேண்டுமென காவல்துறை தடைபோட்டனர்.

 இதனால்  பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு நிலவியது.