அன்புத் தங்கைகளே! விஜய் பரபரப்பு கடிதம்!

ம.பா.கெஜராஜ்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன் கொடுமையை கண்டித்து பிரதான அரசியல் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது த.வெ.க.தலைவர் விஜயும் இணைந்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தின் விவரமாவது,
கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்திடுவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்.
தமிழக வெற்றிக் கழகம்
இவ்வாறு விஜய் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்