பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குப்புற கவிழ்ந்த கன்டெய்னர்!

ஜி.கே.சேகரன்,
பெங்களூரில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவில் தலை குப்புற கவிழ்து விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கள் பகுதியில் பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது தென்கடப்பந்தங்கள் வளைவு பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரை கட்டுப்பாட்டு இழந்து சாலையில் நடுவே தலைக்குப்புற கழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்பவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் சாலையின் நடுவே தலைக்குப்புற கழுந்து விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து ஆமை போல் ஊர்ந்து சென்றது.