வக்கீல் உடையில் டெல்லி நீதிமன்றத்தில் கொலையாளிகள்! துப்பாக்கியில் சுட்டு நான்கு பேர் பலி!

வக்கீல் உடையில் டெல்லி நீதிமன்றத்தில் கொலையாளிகள்! துப்பாக்கியில் சுட்டு நான்கு பேர் பலி!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 டெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது..

 வக்கீல்களை போல் கவுன் அணிந்து வந்த கொலையாளிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பேமஸ் தாதா கோகி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

 தாதா கோகி உள்ளிட்டோர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.

 தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய நீதிமன்றத்தில் அறை எண் 207 அருகே துப்பாக்கிச்சுடும் சப்தம் கேட்ட பின்னரே பாதுகாப்பு அதிகாரிகள் உஷாராகியுள்ளார்கள்.

 தாதா கோகியை கொல்வதற்காக, கொலையாளிகள் வக்கீல்களைப் போல கவுன் அணிந்து காலையிலேயே நீதிமன்றத்துக்குள் வந்துவிட்டனராம்.

 கோகியை விசாரணைக்கு போலிசார் அழைத்து வந்ததுமே, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் கோகி உட்பட நான்கு பேர் செத்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு நீதிமன்றத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

  பேமஸ் தாதா கோகி ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் ஆவார். அவரது முழு பெயர் ஜிதேந்தர் கோகி.