அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்! காயம் பரபரப்பு!

கு.அசோக்,
ஆம்பூர் அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பத்தாம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அரசு பள்ளிகளில் தொடரும் மாணவர்களின் மோதலால் பெற்றோர்கள் அச்சம் அட்ய்ந்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் சந்தோஷ் மற்றும் காரப்பட்டு பகுதியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் தினேஷ் ஆகிய இருவரும் அரங்கல்துருகம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளியில் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது அதில், இன்று பள்ளி விடுமுறை என்றாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாட சிறப்பு வகுப்பு உள்ளதாக சென்ற நிலையில் மீண்டும் இருவருக்குமிடையே வகுப்பறையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வெளியில் வந்த சந்தோஷ் பள்ளி அருகில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மீண்டும் அங்கு சென்ற தினேஷ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியதில் திடீரென தனது இருசக்கர வாகன சாவியை எடுத்து சந்தோஷின் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதில் கண் பகுதியில் படுகாயமடைந்த சந்தோஷை அங்கிருந்து சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு அரங்கல்துருகம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இது குறித்து தகவல் அறிந்து சென்ற உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்களின் மோதல் போக்கினை அரசு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.