சரக்கு போட்டு நடு ரோட்டில் கலாட்ட செய்த இளம் பெண்!

 உ.சசிகுமார்,

 காதல் தோல்வியால் சரக்கடித்த இளம் பெண் நடுரோட்டில் சுற்றித்திரியும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

 மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியர் நகர், பூல் பாக் சந்திப்பில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்து கொண்டிருந்தார்.

 அதை சிலர் வீடியோ எடுத்து வைரலாக்கினர்.

  அந்த பெண் காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.    வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் தள்ளாடி சுற்றுகிறார்.

 சாலையில் செல்லும் மக்களை கலாய்க்கிறார்.

 ஒரு கார் மீது ஏறி உற்சாகமாய் வலம் வருகிறார். அதே போல் ஒருவரின் ஸ்கூட்டரை பிடுங்கி அதில் ஏறி பயணிக்க முற்படுகிறார்.

 சாலை தடுப்புகளை கீழே தள்ளி விட்டு ரகளை செய்துக் கொண்டிருந்த அவரை பல பெண்கள் அவரை கார் பேனட் மீதிருந்து இறக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

  கடைசியில் போலிசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த பெண்ணை சமாதானம் செய்து அனுப்பினர்.