எங்களுக்கு அதோ அந்த இடத்தை கொடுங்க கலெக்டர் அம்மா? ஏழைகள் கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
கொணவட்டம் தேவி நகரில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் இல்லை அரசே வீடு கட்டி கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம், வேலூர், கொணவட்டம் அடுத்த தேவி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில் சுமார் 80 ஆண்டுகளாக 42 குடும்பங்கள் வீடு கட்டி வசித்துவருகிறோம் இதற்கு வீட்டு வரி மின் இணஈப்பு குழாய்கள் இணைப்பும் உள்ளது.
இங்கு வசிக்கும் பொதுமக்கள் நாங்கள் அனைவரும் தினசரி கூலி வேலை செய்தும் பீடி வேலை செய்தும் சுமை தூக்கும்தொழில் செய்தும் பிழைப்பை நடத்தி வருகிறோம்.
தற்போது இப்பகுதியை பொதுப்பணித்துறையின் நீர் வளத்துறை பிரிவினர் இந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது என கூறி எங்களை அங்கிருந்து அகற்ற உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.
எனவே சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த எங்களின் பிள்ளைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கி றார்கள். எனவே இங்கிருந்து எங்களை அனுப்பினால் எங்களுக்கு வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கபடும்.
எங்களுக்கு வேறு எங்கும் வீடு இல்லை என்பதாலும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தை எங்களுக்கு மாற்று இடமாக ஒதுக்கி தந்தால் ஏழை எளிய மக்களான எங்களுக்கு அது பெரிதும் உதவியாக அமையும்.
எனவே தாங்கள் கூறும் இடத்தை நாங்கள் வளர்ச்சி பணிகளுக்காக வழங்குவதில் எங்களுக்கு எந்த தடை இல்லை, எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கியோ எல்லது அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டி வழங்கப்படும் வீடுகளிலோ எங்களின் 42 குடும்பங்களுக்கும் ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.