சிறுவனிடம் பலான சில்மிஷம்! 20 ஆண்டுகள் சிறை!

சிறுவனிடம் பலான சில்மிஷம்! 20 ஆண்டுகள் சிறை!

M.Delhi babu,

   எட்டு வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறாது

   கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும் கட்டடத் தொழில் முருகேசன். இவருக்கு திருமணம் ஆகவில்லை.  இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுவனிடம் செல்போனில் விளையாட்டு மொம்மை படம் காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

   இது தொடர்பாக கடந்த 20.03.2022 ஆம் தேதி முருகேசன் கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நீலையில் நீதிபதி நசீமாபானு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கினார்.

 அதில் குற்றவாளி முருகேசனுக்கு  20 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்தும் ரூ. 3000 ரூபாய் அபராதம் மற்றும்  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

 

 

 

 

 

 

 

 ................................................

 இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம்