டிவைடர் மீது மோதிய பஸ்:-15 பேர் காயம்!!

கு.அசோக்,

  தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரின் மீது தனியார் பேருந்து மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

   இராணிப்பேட்டை மாவட்டம், வி.சி.மோட்டூர் சென்னை- ஆந்திரா பகுதிகளை இணைக்க கூடிய தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள (டிவைடர்) தடுப்பு சுவரின் மீது இன்று இரவு காஞ்சிபுரம் பகுதியில் இருந்து ஆற்காடு வரை இயக்கக்கூடிய எம்.பி.டி தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக அதிவேகமாக வலது புறத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

   இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து உள்ளே இருந்த இருக்கை தடுப்பு கம்பிகளின் மீது மோதி காயமடைந்தனர்.

   மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணிப்பேட்டை போலீசார் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர்  இந்த விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலிசார் சீர்படுத்தி விபத்து குறித்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.