பாலாற்றில் தடுப்பணை கட்டுங்க:- பா.ம.க தீர்மானம்!

ஜி.கே.சேகரன்,
பாலாற்றில் தமிழக அரசு அறிவித்த படி சேண்பாக்கம் மற்றும் பொய்கையில் தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்க வேண்டும - காட்பாடியில் நடைபெற்ற பாமக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் இளவழகன் மாநில துணை தலைவர் முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் ,வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்பாபிகதிரவன்,நிர்வாகிகள்,சாரதி,துளசிராமன்,புருஷோத்தமன்,வேல்முருகன்,செங்கூட்டுவன்,சம்பத்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- தமிழக அரசு அறிவித்தபடி பாலாற்றின் குறுக்கே பொய்கை மற்றும் சேண்பாக்கம் பகுதிகளில் உடனடியாக விவசாயிகளின் நலன் கருதி சிறிய தடுப்பணையை கட்ட வேண்டும்.
மூஞ்சூர்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
அதற்கான கட்டணம் செலுத்தியும் தொடர்ந்து புறக்கணிக்கபடுவது கண்டிக்கதக்கது.
வேலூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொலை கொள்ளைகள் நடக்கிறது முழு காரணமான கஞ்சா கள்ளச்சாராயம் போதை பொருட்கள் போன்றவற்றை அரசு தடை செய்ய வேண்டும்.
இதனால் இளைஞர்கள் சீரழிகிறார்கள் அதனை கடுமையான நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.