பலே கார் கொள்ளையன் கைது! மேலும் சிலரும் சிக்குவார்கள் என தகவல்! 41 கார்கள் பறிமுதல்!!

  பலே கார் கொள்ளையன் கைது! மேலும் சிலரும் சிக்குவார்கள் என தகவல்! 41 கார்கள் பறிமுதல்!!

ஜி.கே.சேகரன்,

 காட்பாடி அருகே  41 கார்களை அபேஸ் செய்து அவற்றை பிரித்து விற்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இவரின் கைவரிசை என விசாரணையில் அதிர்ச்சி தகவல்

   வேலூர்மாவட்டம், காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவக்குமார். இவர் மேல் வடுகன் குட்டை பகுதியில்  கார் மெக்கானிக் ஷெட் வைத்துள்ளார்.

 பகல் நேரங்களில் இவர் நகர் பகுதிகளில் நோட்டமிட்டு இரவில் காரை அபேஸ் செய்து வந்து இரவோடு இரவாக அவற்றை தனித்தனியாக பிரித்து உதிரி பாகங்களை விற்பார்.

   மேலும்  கார் பாடியை முழுமையாக போலி கார் எண்களை போட்டு விற்பனையும் செய்து விடுவார்.

இதுகுறித்து காட்பாடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், காட்பாடி நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி பெற்று இன்று கார் மெக்கானிக் ஷெட்டை சோதனை செய்தனர்.

  இதில் 41 கார்கள் எந்த வித ஆவணமுமில்லாமல் மேற்படி ஷெட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 27 கார்களை பிரித்து உதிரிபாகமாக வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பாகங்களையும், மீதமுள்ள கார்களையும் விற்க முயற்சி செய்துள்ளார்.

 இதனால் காட்பாடி காவல்துறையினர் தேவா (எ) தேவகுமாரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  அவர் கார் ஷெட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.1 கோடியாகும். தமிழகம் முழுவதும் இது போன்று கார்களை திருடி இவர் மேலும் சில நண்பர்கள் வைத்து பிரித்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விசாரணையில் ஆற்காடு ஜாகிர், வேலூர் கள்ளுகடை சந்து செட்டியார், கிருஷ்ணா தியேட்டர் அருகில் உள்ள கார் உதிரி பாக கடை என  மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.