பி எஸ் பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை! சென்னையில் பதற்றம்!!

ம.பா.கெஜராஜ்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் இன்று மாலை படுகொலை செய்யப்பட்டார்.
அவர் செம்பியத்தில் உள்ள அவரது வீட்டு அருகே சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து சரமாரியாக அவரை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
அதைத் தடுக்க முயன்ற இரண்டு நபர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்நிலையில் ஆம்ஸ்டாங்கையும் அவருடன் வெட்டுப்பட்ட இருவரையும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவருடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த கொலை சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் அனைத்து வகையிலும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் போலீஸ் அதிகாரி அசரா கர்க் தலைமையிலான தனிப்படையினர் இன்று இரவு அல்லது நாளைக்குள்ளோ குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று கூறியிருக்கின்றனர்.
கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சினிமா துறை அரசியல் மற்றும் பல முக்கிய நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 3 பைக்குகளில் ஆறு பேர் ஆம்ஸ்ட்ராங் வீடு இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர் அவர்கள் அனைவரும் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் ஆடை அணிந்து வந்துள்ளனர்.
திடீர் என நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் ஆம்ஸ்டார் நிலைகுலைந்தார்.
அவரை மூன்று பேர் ரவுண்டு கட்டி சரமரியாக வெட்டி இருக்கின்றனர்.
மற்றும் மூவர் ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்தவர்களை வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கைத் அவல நிலைக்கு தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்:-எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?
காவல் துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் - ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.