வக்கீல் போல வாய்தா வாங்கிய பிஜேபி! செல்வப் பெருந்தகை பேச்சு!

வக்கீல் போல வாய்தா வாங்கிய பிஜேபி! செல்வப் பெருந்தகை பேச்சு!

க.பால்குரு,

  வக்கீல் தான் வாய்தா வாங்குவார்கள். உலக மகா தேர்தல் பத்திர ஊழலில் பிஜேபி அரசு வாய்தா கேட்டது வெட்கக்கேடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை விமர்சனம்.

  நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கூட்டணி வேட்பாளர்வை.செல்வராஜ் ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கு.செல்வப் பெருந்தகை பேசினார்.

  ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எதையும் செய்யவில்லை,விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.ஆனால் கார்ப்ரேட் பெரும் முதலாளிகளுக்கு வரி குறைப்பு செய்தது மட்டுமல்லாமல் பல லட்சம் கோடிக்கு கடன் தள்ளுபடியையும் செய்துள்ளது மோடி அரசு.

 இதிலிருந்து தெரிகிறது இது கார்பரேட் பெரும் முதலாளிக்கான அரசு என்று.

பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிஜேபி அரசு மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை என்பது நாடே அறியும்.

 தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு அளித்தார். தற்போது நமது தமிழக முதல்வர்  மாணவர்களுக்கு காலை உணவு  அளித்து வருகிறார்.

  தேர்தல் அறிக்கையில் கூறாத மகளிர்க்கு கட்டணம் இல்லாத பேருந்து திட்டம், புதுமை பெண் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். இப்படி கொடுக்கும் நபர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா, மக்களிடமிருந்து எடுப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா...என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

வக்கீல் தான் வாய்தா கேட்பார்கள் ஆனால் பிஜேபி அரசு உலக மகா ஊழல்  தேர்தல் பத்திர வழக்கில்  பாசிச மோடி அரசு வாய்தா கேட்டதை மக்கள் மறந்து விடுவார்களா. எடுப்பவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் நடைபெறும் தேர்தல் இது. ஆகவே நீங்கள் எல்லாம் இந்திய கூட்டணி வெற்றி வேட்பாளார் வை.செல்வராஜுக்கு  கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என கூறி வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றினார்.

  தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு நாகை நாடாளுமன்ற பணி தேர்தல் பணிக்குழு தலைவரும்,திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார்,நாகை நாடாளுமன்ற உறுப்பினரும்,பணிக்குழு செயலாளருமான எம்.செல்வராஜ் முன்னிலை வகித்தார்,காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன்,செயலாளர் அன்பு. வீரமணி மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.