ஏழை பெண்ணை தாக்கி வீரத்தை காட்டிய பாஜக நிர்வாகி!
டி.இ.முகமது,
திருப்பூரில் வாக்கு சேகரிக்க சுற்றிக் கொண்டிருந்த பாஜகவினரிடம் ஜிஎஸ்டி வரி பற்றி ஒரு ஏழை பெண் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு பாஜக மாவீரன் அந்த பெண்ணை தாக்கியதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டி மூஞ்சை பேத்துடுவேன் என்று மிரட்டினார்.
இந்த சங்கதியை அறிந்த அமைச்சர் டிஆர்பி.ராசா அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு விவகாரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் ! கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக.
திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? என கேள்வியெழுப்பியிருக்கிறார்.
எல்லாம் சரி பெண்ணிடம் வீரத்தை காட்டிய அந்த அடாவடி நபர்களில் ஒருவர் பெயர் சின்னசாமியாம். அவரது இழி செயலுக்காக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்று வாக்காளர்கள் கேட்கிறார்கள்.