தலைவர் போன்ல பேசுகிறார்! எங்கேனு கேட்டாரு...? பிரச்சாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு சுவாரசியம்!

 ம.பா.கெஜராஜ்.

 சென்னையிலிருந்து தலைவர் போன்ல பேசுகிறார்! எங்கேனு கேட்டாரு பிரச்சாரத்தில் இருக்கேன்னு சொல்லிட்டேன்! நாம இங்க பண்றது தலைவருக்கு தெரியுது பாருங்க! இந்தியக் கூட்டணிக் கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எவ.வேலு.பேச்சு.

  இந்திய கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை   ஆதரவாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு அவர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னேரி, கந்திலி, காக்கங்கரை, நகர¢ ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்ய வந்திருந்தார்.

  அமைச்சரை பெண்கள் கோலாட்டம் ஆடி உற்சாகமாக வரவேற்றனர்.

 பின்னர் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமான சத்யா சதீஷ் தலைமையில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் எ.வ.வேலு பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்.

  பின்னர் தமிழக அரசின் மக்கள் நலதிட்டங்கள், மகளிர்க்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 இந்நிலையில், திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலின் எவ.வேலுவை கைபேசியில் அழைத்தார். அப்போது நான் ஜோலார்பேட்டை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என கூறினார். சற்று நேரம் பேசிய பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

  அப்போது மேடையில் பேசிய எவ. வேலு என்னை தலைவர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் ஜோலார்பேட்டை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என தகவலை பதிவு செய்து விட்டேன் என பொதுமக்கள் மத்தியில் கூறினார், அதேக்கேட்ட பொதுமக்கள் ஆரவாரம் எழுப்பினர்.

  பின்னர் அமைச்சர் எ.வ.வேலு தோழமைக் கட்சிகளின் ஓட்டு, இளைஞர்களின் ஓட்டு, விவசாயிகளின் ஓட்டு, உதயசூரியன் உதயசூரியன்.

   இந்த கோலாட்டம் ஆடும் தங்கச்சிகள் வாயை திறக்கல, அப்படியே மியூசிக்கோடு சொல்லுங்க பாப்போம்,உங்கள் ஓட்டு, கோலாட்டத்தின் ஒட்டு, உதயசூரியன் என பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.