வேலை வாங்கி தருவதாக ரூ.1.25 கோடி மோசடி!
ஜி.கே.சேகரன்,
ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.1.25 கோடி வரையில் மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்த இருவரை வேலூர் மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர்,ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி 57 பேரிடம் இந்திய ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி இரண்டு பேர் ரூ.1. 25 கோடி வரையில் பணம் பெற்று மோசடி செய்ததாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றபிரிவு காவல் ஆய்வாளருக்கு புகார்கள் வந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடியில் ஈடுபட்டது வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த மூர்த்தி (51), திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் (60) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.