அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

க.பாலகுரு,

  திருவாரூரில் முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் கோட்டாட்சியர் உள்பட  மூன்று அரசு அதிகாரிகளின் வீடுகளில்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

 கடந்த 2017 ஆம் வருடம்,  திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக வேறு ஒருவருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததன் மூலமாக பல கோடி ரூபாய் ஆதாயமடைந்தாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

 இது தொடர்பாக செந்தில் அளித்த புகாரில்.. லஞ்ச ஒழிப்பு போலீஸார் அப்போதைய திருவாரூர் கோட்டாட்சியர் முத்து மீனாட்சி மற்றும் அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனையில் ஈடுபட்டனர்.

   முத்து மீனாட்சி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதேபோல துர்கா ராணி, திருவாரூர் அருகே விளமல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.. கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.