முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி!

முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி!

ஜி.கே.சேகரன்,

காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 34 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பேசினர்.

    பள்ளிக்கு ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைத்துக் கொடுத்தனர்.  அவர்கள் படித்த காலத்தில் இருந்த தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்

 வேலூர்மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

  34 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சசிகுமார்,பொருளாளர் கே.வெங்கடேசன், இணைச் செயலாளர்  நெடுமாறன், துணைச் செயலாளர் எஸ்.தண்டபாணி, ஜி. சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இணைச் செயலாளர் இ.வனிதா வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு ரூ.ஒன்றரை லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டு அதனை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பி.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

  முன்னாள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.சிவக்குமார், காட்பாடி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆர்.ரவி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

   விழாவில் முன்னாள் மாணவர்களான சென்னை உதவி போலீஸ் கமிஷனர் ஆர். மகேந்திரன், சிங்கப்பூர் மென்பொருள் பொறியாளர் வி. கார்த்திகேயன், மாநகராட்சி சுகாதார அலுவலர் கே. சிவக்குமார், வள்ளலார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜி.ஜெயந்தி பூங்கொடி, பிரம்மபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.டி.புகழ்வேந்தன், ஆசிரியை எம்.ரேவதி ஆகியோர் பேசினர்.

முடிவில் டி. புருஷோத்தமன் நன்றி கூறினார்.