ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் இல்லை- துரைமுருகன்! 38 இடங்களில் மருந்து உள்ளது மா.சுப்பிரமணி!! மாறி மாறி பேட்டியளித்த அமைச்சர்கள்!

ஜி.கே.சேகரன்,
ஆரம்பசுகாதார நிலையங்களில் மருந்துகள் தட்டுபாடு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக குறை கூறிய துரைமுருகனுக்கு, 38 அரசு மருத்துவ கிடங்குகளில் மருந்து உள்ளது அதனை வாங்கி வராதது அந்தந்த மருத்துவர்களின் தவறு என சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் பதிலளித்து பேட்டி.
வேலூர்மாவட்டம், பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவர சொன்னார், பாம்பு கடிக்கு மருந்தில்லை ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது இங்கு வந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறினார்கள்.
இதனால் ஆரம்பசுகாதார நிலையம் சரியாக செயல்படவில்லை இதனால் இரண்டு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டு பின்னர் மேல்பாடி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தார்
முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையம் மருத்துவர்கள் சரியாக இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் இங்கு பாம்பு கடிக்கு கூட மருந்துகள் இல்லை இதனால் நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 50 கிலோமீட்டர் தூரம் எடுத்து செல்லும் வழியில் நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
கட்டிடம் பழுதடைந்துள்ளது, இதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டிதர சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லாலாப்பேட்டை சுகாதார நிலையம் ஆய்வு செய்தேன். இதில் பொன்னையில் மருந்துகளை வாங்கி வந்து வைக்காமல் உள்ளனர் மருந்தாளுநர் பணியும் காலியாக உள்ளது.
இன்றுதான் பொறுப்பாக ஒருவரை அனுப்பியுள்ளனர், மருத்துவர்கள் உள்ளூரில் இருப்பதால் சரியாக செயல்படவில்லை, ஆகவே பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது தமிழகத்தில் புதியதாக மயிலாடுதுறை ,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம் பெரம்பலூர்,தென்காசி ஆகிய 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மருந்து தட்டுபாடு அரசு மருத்துவமனைகளில் கிடையாது 38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகள் உள்ளது அங்கிருந்து மருந்துகளை மருத்துவர்கள் பெற்று வருவதில்லை அதனால் தான் தட்டுபாடு உள்ளது. வேண்டுமானால் அனைத்து மருந்து கிடங்குகளையும் செய்தியாளர்கள் ஆய்வு செய்யலாம் என்று கூறினார்.
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனோ மருந்து தட்டுபாடு உள்ளது என செய்தியாளர்களிடம் கூறினார் அதே இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியோ மருந்து தட்டுபாடில்லை என உறுதி பட கூறியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருவலம்,பள்ளிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.