நீர்நிலை 'சர்வே' எண்களில் தில்லாலங்கடி!

நீர்நிலை 'சர்வே' எண்களில் தில்லாலங்கடி!

  ம.பா.கெஜராஜ்.

   விவிஐபிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நீர் நிலைகளை வளைத்துப் போட்டுக் கொண்டு அதன் மூலம் பல வியாபார ஸ்தலங்களையும், வீட்டுமனைகளையும் உருவாக்கி வாழையடி வாழையாய் அனுபவித்து வருகிறார்கள்.

 யிது குறித்து புகார் எழும் போதெல்லாம் சர்வே எண்களில் தில்லாலங்கடி வேலை செய்து தப்பி வருகிறார்கள்.

 குறிப்பாக நீர்நிலை 'சர்வே' எண்களில் திருட்டுதனமாக உட்பிரிவுகளை ஏற்படுத்தி நழுவி விடுகிறார்கள்.

  இந்நிலையில் அப்படிப்பட்ட உட்பிரிவு சர்வேக்களை ரத்து செய்வது குறித்து, வருவாய் அலுவலர்களாக் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில், தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும், மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்தன. இவை அந்தந்த பகுதி உள்ளூர் விவிஐபிக்களின் ஆசையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

  சில இடங்களில் வீட்டு மனைகளாக விற்கப்பட்டுள்ளன.இந்த மனைகளை குறைந்த விலைக்கு வாங்கி குடியேறியவர்கள், தற்போது ஆக்கிரமிப்பாளர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

   இது போன்று நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைக்காலத்தில் வெள்ளக்காடாக மாறுகின்றன.இந்நிலையில், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், உருவாக்கப்பட்ட மனைகள் விற்பனை பத்திரங்களை பதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இந்த திருட்டுதனத்துக்கு முக்கிய காரணமான உட்பிரிவு சர்வே எண்களை ரத்து செய்ய ஆலோசனைகள் நடந்து வருகிறதாம்.