தனிப்பிரிவு ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்படவில்லை!
ம.பா.கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலத்தில், தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேலூரிலுள்ள "இன் சர்விஸ்" பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி காவல் ஆய்வாளர் பழனியை "பணியிடை நீக்கம்" செய்யப்பட்டதாக பொய்யான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அதிலும் வாணியம்பாடி கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே டி.எஸ்.பி. பழனிச்செல்வம் மற்றும் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த வரிசையில் திருப்பத்தூர் தனிப்பிரிவு ஆய்வாளர் பழனி அவர்களையும் பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த தகவல் பொய்யானது ஆகும் என்று தெரிவித்த ஒரு காவல் அதிகாரி, தனிப்பிரிவு ஆய்வாளர் பழனியை பணியிடம் மாற்றம் செய்தது காவல் துறையில் உள்ள வழக்கமாக நடைமுறைதான்.
கிட்டத்தட்ட ஓராண்டு 11 மாதங்கள் அவர் தனிப்பிரிவு ஆய்வாளராக சிறப்பாக பணியாற்றினார். இப்படி இரண்டு ஆண்டுகள் நெருங்குவதன் அடிப்படையில் தான் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தான் கட்டுபாடுகள் இன்றி பொய் செய்தி வெளியிடுகிறார்கள் என்றால், குறிப்பிட்ட நாளிதழ் இணைய செய்தி உட்பட பலவற்றில் ஆய்வாளர் பழனி சஸ்பெண்டு செய்யப்பட்டாக பொய் செய்தி வெளியிடுகிறார்கள். அவர், டிரான்ஸ்பர் என்கிற தகவலை திரித்து, இப்படியா மக்களுக்கு பொய்யான தகவலை தெரிவிப்பது.
வெளியிடுவதற்கு முன் செய்தியின் உண்மைத் தன்மை குறித்து கிராஸ் செக் செய்வதெல்லாம் இப்ப இல்லவேயில்லை என்று வேதனை பொங்க தெரிவித்தார் அவர் பழனி டிரான்ஸ்பர்தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்.