அராஜகமாக நடந்துக் கொண்ட வீரமணியின் ஆதரவாளர்கள்!

 ம.பா.கெஜராஜ்,

 முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று இரவு வரை சோதனை நடத்தப்பட்டது.

 லஞ்ச ஒழிப்பு போலிசார் நடத்திய இந்த சோதனை பணிக்கு வீரமணியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

 கோஷங்கள் வாயிலாக அவர்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 இந்த சூழலை கட்டுப்படுத்த முயன்ற காவல் துறையினரை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

  மிகுந்த ஆபாசமான வார்த்தைகளால் சவுண்டு விட்டார்கள்.

  இரவுவரை கத்தியும் அடங்காத அவர்கள், ரைடு முடிந்து வீரமணியின் வீட்டிலிருந்து வெளியில் வந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் வாகனத்தை தட்டி கலாட்டா செய்தனர்.

  அவர்களையும் ஆபாசமாக வசைபாடினர்.