நல்ல புத்தகங்களை வாசித்தால் நல்ல எண்ணம் வரும்!பெண்கள் கல்லூரியில் ஆட்சியர் அமர்குஷ்வாஹா!

நல்ல புத்தகங்களை வாசித்தால் நல்ல எண்ணம் வரும்!பெண்கள் கல்லூரியில் ஆட்சியர் அமர்குஷ்வாஹா!

ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில்  மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில்  மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் ஒரு குழுவில் ஒரு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் 5 ஆண்டு காலத்திற்கு பிறகு அண்டை மாவட்டத்தில், அண்டை மாநிலத்தில் மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவில் மாணவ, மாணவியர்கள் பணிபுரிவார்கள்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு நாம் எதை சொல்லிக் கொடுத்தாலும் ஆக்கபூர்வமாக கற்றுக்கொடுக்க வேண்டும். சிறு சிறு கதைகள் மூலம் எடுத்துரைத்தால் அவர்களுக்கு நன்றாக புரியும். நீங்கள் நூலகத்தை பார்த்திருக்கிறீர்களா? நூலகத்தில் சென்றிருக்கிறீர்களா, நூலகத்தில் சென்று நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பொழுது நல்ல மனசு இருக்கும், நல்ல மனசு இருந்தால் நல்ல சமூகம் அமையும், நல்ல சமூகம் அமைந்தால் நல்ல மாவட்டம் அமையும், நல்ல மாவட்டம் அமைந்தால்,  நல்ல மாநிலம் அமையும்.

 நல்ல மாநிலமாக அமைந்தால், நல்ல நாடு அமையும். எனவே நீங்கள் அனைவரும் புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும்.

பின்னர் நாட்டு நலப்பணி திட்டத்தில் பங்கு பெற்ற 50 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 50 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி வட்டம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி சாலைக்கு அருகில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நட்டு வைத்தார்கள்.

    இப்பயிற்சியில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கயத்தரி சுப்பிரமணியம், மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் தலைவர் திரு.விமல்சந்த் ஜெயின், வேலூர் மாவட்ட திருவள்ளுவர் பல்கலைகழக நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ரவிசந்திரன் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.இன்பவள்ளி, தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர்பார்த்திபராஜா, மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.சக்தி மாலா உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருப்பத்தூர் மாவட்டம்.