மின்வெட்டால் தவிக்கும் நந்திவரம்- கூடுவாஞ்சேரி குடியிருப்புவாசிகள்.!

பா.சுரேஷ்,
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 1ல் தொடங்கி வார்டு 30 வரையிலான பகுதியில் சுமார் 45000 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் மக்கள் மின்வெட்டால் மிகுந்த சிரமத்தில் வாழ்வதாக புலம்புகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைக்கு பொதுமக்கள் வாழ்க்கை மாறிவிட்டது. பெரும்பாலான சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குவதால், மின்சாரம் தடைபடும்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. மின்தடை செய்வதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துவதில்லை.மழை காரணமாக மரங்கள், கிளைகள், பேனர்கள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. மழை பெய்யும் நேரத்தில் மின் கம்பங்களில் உள்ள இன்சுலேட்டர் சேதமடைகிறது. இதனை சீர்செய்ய சில மணி நேரம் ஆவதாலும், தமிழகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 18500 க்கு கூடுதலாக Mw மெகாவாட் தேவைப்படும் நிலையில், தற்போது 16000 MW மெகாவாட் மட்டுமே கிடைக்கபெரும் நிலையிலும், போதிய அளவில் பணியாளர்களை நியமிக்காததால் நான்கு நபர் செய்ய வேண்டிய பணியினை ஒரு நபர் மேற்கொள்வதால் பணிசுமையோடு பணியில் தொழ்வு ஏற்படுகின்றது. சில நேரங்களில் பழுதை கண்டறியவே பல மணி நேரம் ஆகிறது.அதனை கண்டுபிடித்து சீரமைக்க காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து சி.இ, எஸ்.இ மற்றும டி.இ ஆகிய உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக வேண்டுக்கோள் விடுத்துள்ளோம்.விரைவில், மின்வெட்டு தொடர்பான பிரச்சனை தீர்வு காணப்படும் என உயர் அதிகாரிகள் கூறியதாக நம்மிடையே தெரிவித்தார்