பள்ளி அருகே போதை பொருட்கள்! தடை போட்ட கலெக்டர்!!! கொரோனா விதி முறைகளையும் அமுல்படுத்தினார்!!!

பள்ளி அருகே போதை பொருட்கள்!  தடை போட்ட கலெக்டர்!!! கொரோனா விதி முறைகளையும் அமுல்படுத்தினார்!!!

 ம.பா.கெஜராஜ்,

 பள்ளிக்கூடம் எதிரில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரை தொடர்ந்து வேலூர் கலெக்டர் நேரில் நடவடிக்கை எடுத்தார். மேலு கொரோனா விதிமுறைகள் அமுல்படுத்தினார்.

இது பற்றின விவரம் வருமாறு,

 கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

  நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

   திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திடல்வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

  அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா நோய்தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

  கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைவலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

  கலெக்டர் ஆய்வு,

 வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  கணியம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படுவது குறித்தும், மாணவ-மாணவியர்கள் ஒழுக்கமான முறையில் பள்ளிக்கு வருவது குறித்தும்  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும், சுவர்களில் கிறுக்கல்கள் செய்ய கூடாது எனவும், தலைமுடியை எவ்வித அலங்காரமும் செய்யமால் ஒழுங்கான முறையில் வெட்டி பள்ளிக்கு வர வேண்டும் எனவும், பள்ளி சீருடையை எவ்வித மாறுதலும் இன்றி சரியான முறையில் உடுத்த வேண்டும் எனவும் மாணவர்களுக்கு  அறிவுறுத்தினார்.

            இதனைத் தொடர்ந்து , பள்ளி எதிரில் உள்ள சிறிய கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற புகார் வரப்பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காவல்துறையினருடன் பள்ளி அருகில் உள்ள கடையில் சோதனை செய்து போதை தரக்கூடிய பொருட்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்ய கூடாது என கடை உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்து சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்றுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

            தொடர்ந்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை  முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனை வளாகத்தை சுத்தமான முறையில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

            இந்த ஆய்வின் போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முதல்வர் மரு.செல்வி, வேலூர் வட்டாட்சியர் திரு.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தயாளன், திருமதி.பானுமதி, கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்