முதல்வர் வீட்டுக்கு எதிரே மதிமுக பிரமுகர் தீக்குளிப்பு!

முதல்வர் வீட்டுக்கு எதிரே மதிமுக பிரமுகர் தீக்குளிப்பு!

முகிலன்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு எதிரே மதிமுக பிரமுகர் ஒருவர் தீக்குளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ம.தி.மு.க.வைச் சேர்ந்தவர் ஆவார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு கட்சி சார்பாக சீட்டு கொடுக்கவில்லையாம்

  ஆகவே அவர் சுயேட்சையாக போட்டியிட களம் இறங்கியிருக்கிறார்.

 இதனால் வெற்றிவேலுக்கு மிரட்டல் வருவதாக புகார் சொல்லி வந்தார். அதை எவரும் கண்டு கொள்ளாததால் தீக்குளிப்பு முயற்சியை எடுத்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 தற்போது அவர் 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.