காவலர்களை பாராட்டி வாழ்த்து சொன்ன கோவை எஸ்.பி!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்து தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற காவலர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது
26.01.2023 குடியரசு தின அணிவகுப்பின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்டத்தை சேர்ந்த 38 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேற்படி 38 காவலர்களுக்கு தமிழக அரசின் நற்பணி சான்றிதழ் தற்போது கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டது.
அப்போது காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவலர்களையும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.