நாங்க சொன்னா தான் செய்தி எடுக்கனும்:- ஊராட்சி தலைவரின் டுபாக்கூர் கெத்து!

தாம்பரம் முரளிதரன்,

நாங்க சொன்னாதான் செய்தி எடுக்கனும், பஞ்சாயத்து கட்டிடத்தை ஏன் போட்டோ எடுத்த, என்று ஊராட்சி பெண் தலைவரின் கணவர் டுபாக்கூர் கெத்துகாட்டி தமிழகம் முழுவதில் ச்ச்சீ பட்டம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

 ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மனைவிக்கு பதில் தானே தலைவர்.. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவை சேர்ந்த தலைவரின் அராஜக கணவரின் செய்கைதான் சமூக ஊடகங்களில் முக்கிய செய்தியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

 செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில் தலைவராக இருக்கிறார் செல்வசுந்தரி. அவரது கணவரின் பெயர் இராஜேந்திரன். அவர் திமுக கிளை செயலாளராக உள்ளார்.

 

தலைவரின் கணவரான இராஜேந்திரன் எந்த நேரமும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அனைத்து பணிகளிலும் மூக்கை நுழ்த்து வருவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

  அந்த வகையில் தற்போது ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான இராஜேந்திரனின் பிறந்தநாள் விழாவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழா கேக் வெட்டும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

 திமுக கிளை செயலாளருமான ராஜேந்திரன் மீதும், ஊராட்சி மன்ற தலைவருமான செல்வசுந்தரி மீது, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீதும்  இது போன்ற புகார்களை ஆதாரங்களுடன் கூறியும் ஹூம் ஒரு நடவடிக்கையும் இல்லையாம்.

  இந்நிலையில் செய்தி சேகரிக்க  நிருபர்களை பார்த்து ஆத்திரப்பட்ட கணவர் இராஜேந்திரன் என்னைக் கேட்காமல் எதுக்குடா வந்த என்று ஒருமையில் பேசியது மட்டும் இல்லாமல், நான் சொல்வதை தான் செய்ய வேண்டும், நான் சொன்னாதான் செய்தி எடுக்கனும் என மிரட்டினார்.

   மேலும் செய்தியாளரை அவமானப்படுத்தும் விதமாகவும் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் விதமாக மிக கேவலமான வார்த்தைகளில் உபயோகித்து பேசினார்.

   இதுகுறித்து படம் மற்றும் வீடியோ எடுப்பதை தெரிந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர் செய்தியாளரின் கேமராவை பறித்து மட்டுமில்லாமல் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என போலீசாருக்கு போன் செய்து பந்தா காட்டினார்.

   உங்க ஊட்டுகாரம்மா தான் தலீவரு...நீ எடுதுக்குப்பா உதார் விடுறே என்று கட்சி தலைமை இராஜேந்திரனிடம் கேள்வி கேட்குமா?