வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாம்! மத்திய அமைச்சர் எல்.முகருகன் பேச்சு!

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாம்! மத்திய அமைச்சர் எல்.முகருகன் பேச்சு!

ஜி.கே.சேகரன்,

மத்திய அரசு வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி , மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் குடிநீர்,வீடு ஆகியவற்றை அளித்து வருகிறது. 2047 ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் .முருகன் பேசினார்

  வேலூர்மாவட்டம்,அரியூரில்   உள்ள ஸ்ரீ நாராயணி பீடம் ,விஸ்தார் அமைப்பு மற்றும்சேவாபாரதி ஆகியவற்றின் சார்பில் இலவச நடமாடும் மருத்துவ முகாம் துவக்க விழாஇன்று வேலூர் ஸ்ரீபுரத்தில் நடைபெற்றது.இதனை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன்மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் நிறுவனர்  சக்தி அம்மா ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல்.முருகன்நாட்டில் ஏற்படும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் சேவா பாரதி அமைப்பு தங்களை முழு அளவில் ஈடுபடுத்தி பணியினை செய்து வருகிறது.

 குறிப்பாக சுனாமி, கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பு காலங்களில் சேவா பாரதி அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

   அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டு வருகிறது.

 தமிழ்நாட்டில் மட்டும் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.2014 ஆண்டுகளுக்கு முன்பு 7 எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமேஇருந்தது.கடந்த 10 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 75 ஆயிரம் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பல தனியார் மருத்துவமனைகளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெளிப்படை தன்மையுடன் மருத்துவ கட்டமைப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

 நாட்டில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.பாரத பிரதமர் நரேந்திர மோடி தரமான மருத்துவம் வழங்க வேண்டும் என்பதற்காகஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

 மத்திய அரசு பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயா வழியை பின்பற்றிபல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசு வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி, மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் குடிநீர் ,வீடுஆகியவற்றை அளித்து வருகிறது.

 2047 ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.அதற்காக சமுதாய கட்டமைப்பு மற்றும் உள்கட்ட அமைப்பைமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்ட வல்லரசு என்ற கனவை,நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

 வருமுன் காப்போம் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகா கலையை கற்றுக்கொடுக்க சர்வதேச அளவில்எடுத்துச் சென்றுள்ளார்.தற்போது இந்த யோகா கலையை ஐநா அமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்திய மருத்துவ பாரம்பரத்தை ஊக்குவிக்க ஆயுஷ்மருத்துவ வசதியை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார்.

 முன்னதாக வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்திற்கு வந்த அமைச்சருக்கு ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் சார்பிலும் பாஜக சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.