சுடுகாடுக்கு இடம் கோரி கிராம மக்கள் சாலைமறியல்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம்,காட்பாடி வட்டத்திற்குட்பட்ட குப்பு ரெட்டியூர் அருந்ததியர் கிராமத்தில் முதியவர் நரசிம்மன் (80) என்பவர் இறந்து போனார்.
இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் பாலாற்றில் புதைப்பது வழக்கம். ஆனால் சடலத்தை கொண்டு செல்ல சரியான பாதை கிடையாது. தனியார் நிலத்தின் வழியாக கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது அந்த தனியார் நிலம் முழுவதும் முள் செடிகள் முளைத்து புதர் போல் உள்ளது. எனவே தங்களுக்கு ஏரியின் அருகே புறம் போக்கு நிலம் உள்ளது அதில் தனி சுடுகாடு ஒன்றை அமைத்து தர வலியுறுத்தி வள்ளிமலை - பொன்னை சாலையில் மக்கள் சாலைமறியல் செய்தனர்.
இதனால் பேருந்துகள் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மேல்பாடி காவல்துறையினர் தகவலறிந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் சாலைமறியலை கைவிட்டனா.¢ இறந்தவரின் வீட்டின் அருகிலேயே மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.