ராப்ரிதேவியுடன் ஒப்பிட்டப்பட்ட உத்தவ் தாக்ரேவின் மனைவி! பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
மஹாராஷ்டிராவின் முலமைச்சராக உள்ளார் உத்தவ் தாக்ரே. அவரது மனைவி பெயர் ராஷ்மி. இந்நிலையில் ராஷ்மியை, ராப்ரிதேவியுடன் ஒப்பிட்டுள்ளார் பா.ஜ.க நிர்வாகி.
மஹாராஷ்டிராவின் பா.ஜ.க, நிர்வாகி ஜிதேன் கஜாரியா என்பவர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மியை மஹாராஷ்டிராவின் ராப்ரிதேவி என்று குறிப்பிட்டு பதிவிட்டார்.
இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்., - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
அப்படியிருக்க, சில தினங்களுக்கு முன் உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மியின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பா.ஜ.க, நிர்வாகி ஒருவர் மஹாராஷ்டிராவின் ராப்ரிதேவி என குறிப்பிட்டிருந்தார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் சிறை செல்ல நேர்ந்தபோது அவரது மனைவி ராப்ரிதேவியை முதல்வராக்கி அரசை நடத்தினார்.
அவருடன் உத்தவ் மனைவியை ஒப்பிடவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அப்பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் மும்பை குற்றப்பிரிவு போலீசின் சைபர் செல் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும் மும்பை மேயருமான கிஷோரி பெட்னேகர் கூறியதாவது:
யார் இந்த ஜிதேன் கஜாரியா. தேசியவாத காங்கிரஸிலிருந்து கங்காருவைப் போல பா.ஜ.,வுக்கு தாவியவர்.
இன்று மஹாராஷ்டிரா பெண்ணைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அவரை விமர்சிப்பதற்கு என்ன காரணம். அவர் பால் தாக்கரேவின் மருமகள். பால் தாக்கரே தான் பா.ஜ. க,வை கை பிடித்து ஆளாக்கியவர்.
இன்றைக்கு அவருடைய மருமகள் மீதே அவதூறு பேசுகின்றனர். அவர் எங்கள் முன் வந்தால் மகளிர் அணி ஒரு கை பார்த்துவிடும் என்று கொதித்துள்ளார்.