அடங்காத யானை பிடிபட்டது! மக்கள் நிம்மதி மூச்சு!!

அடங்காத யானை பிடிபட்டது! மக்கள் நிம்மதி மூச்சு!!

கு.அசோக்,

 மனிதர்களை கொன்ற காட்டு யானை தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் உள்ள குடிபாலாவில் பிடிக்கப்பட்டது. மய்யக்க ஊசி செலுத்தப்பட்டு பின்னர் கும்கி யானைகள் உதவியுடன்  பிடிக்கப்பட்டதால் மக்களின் அச்சம் நீங்கியது.

 வேலூர்மாவட்டம், வள்ளிமலை அருகே பெரிய போடிநத்தம் கிராமத்தில் விடியற்காலை ஒரு பெண் மணியை காட்டு யானை தூக்கி போட்டு கொன்றது. இதே போன்று ஆந்திர மாநிலம் குடிபாலா அருகே ராமாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவர் மிதித்துகொன்றது.

   இதனை அடுத்து காட்டு யானையை பிடிக்க தமிழக வனத்துறை மற்றும் ஆந்திரவனத்துறை சேர்ந்து கும்கி யானை இரண்டு கொண்டுவரப்பட்டு காட்டு யானையை பிடித்தனர். அதற்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அந்த யானையை வண்டியில் ஏற்றி அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர்.  

   ஆந்திராவில் 2பேரையும் தமிழகத்தில் ஒரு பெண்ணையும் என மூன்று பேரை கொன்ற காட்டுயானை பிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்

   இதே போன்று குடியாத்தம் பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர் '